பிரபல இந்தி நடிகர் ஷாருக்கான் தற்போது ‘கிங்’ படத்தில் நடித்து வருகிறார். ‘பதான்’ படத்தை இயக்கிய சித்தார்த் ஆனந்த் இதை இயக்குகிறார். இதில் தீபிகா படுகோன், அபிஷேக் பச்சன் மற்றும் பலர் நடிக்கின்றனர்.
இதன் படப்பிடிப்பு மும்பையில் உள்ள கோல்டன் டொபாக்கோ ஸ்டுடியோவில் நடந்து கொண்டிருந்தது. அவர்கள் ஒரு சண்டைக் காட்சியை படமாக்கிக் கொண்டிருந்தனர். அப்போது ஷாருக்கான் எதிர்பாராத விதமாக காயமடைந்தார். காயம் குறித்த விவரங்கள் வெளியிடப்படவில்லை.

சிகிச்சைக்காக அவர் தனது குழுவினருடன் அமெரிக்கா சென்றுள்ளார். இது குறித்து ஷாருக்கான் தரப்பில், “பெரிய காயம் எதுவும் இல்லை, அது வெறும் தசைப்பிடிப்புதான். சண்டைக்காட்சிகளின் போது ஷாருக்கான் பல முறை இதுபோன்ற காயங்களுக்கு ஆளாகியுள்ளார்” என்று கூறப்பட்டது.
இதன் காரணமாக, அடுத்து நடக்கவிருந்த படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது.