சென்னை: பாடல்கள் உரிமை தொடர்பான வழக்கில் இசையமைப்பாளர் இளையராஜா சாட்சியம் அளிக்க உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாஸ்டர் கோர்ட்டில் ஆஜரானார். மியூசிக் மாஸ்டர் என்ற இசை நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் 2010-ல் வழக்கு தொடர்ந்தது. அதில் இளையராஜா தனது மனைவி பெயரில் இசை நிறுவனத்துடன் 1997-ல் ஒப்பந்தம் செய்து, அந்த ஒப்பந்தத்தின்படி தேவர்மகன், பாண்டியன், பிரம்மா, குணா உள்ளிட்ட 109 படங்களின் இசை வெளியீட்டு உரிமையை அவரது நிறுவனம் பெற்றிருந்தது.
எனவே, அவரது அனுமதியைப் பெற வேண்டும் என்றும், அனுமதியின்றி அவ்வாறு பயன்படுத்துவதைத் தடை செய்ய வேண்டும் என்றும் கோரி அந்நிறுவனம் வழக்கு தொடர்ந்திருந்தது. இந்த வழக்கில் இளையராஜாவின் இசை நிறுவனமும், இளையராஜாவும் பிரதிவாதிகளாக சேர்க்கப்பட்டனர். வழக்கை விசாரித்த நீதிபதி அப்துல் குதூர் முன்பு ஒப்பந்தம் செய்யப்பட்டபோது யூடியூப் மற்றும் சமூக வலைத்தளங்கள் எதுவும் குறிப்பிடப்படாமல் ஆடியோ ரிலீஸ் ஒப்பந்தம் மட்டுமே செய்யப்பட்டதாக செய்திகள் வெளியாகின.
இந்நிலையில் தற்போது உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாஸ்டர் கோர்ட்டில் இளையராஜா தனது வழக்கறிஞர்களுடன் நேரில் ஆஜராகியுள்ளார். அந்த சாட்சியம் எந்தெந்த ஆவணங்களின் அடிப்படையில் வழக்கில் பிரதிவாதியாக சேர்க்கப்பட்டு, அதுதொடர்பான ஆதாரங்களை அவர் அளித்துள்ளார்.