சரவணன் ‘பொண்டாட்டி ராஜ்ஜியம்’, ‘சூரியன் சந்திரன்’, ‘பார்வதி என்னைப் பாரடி’ உள்ளிட்ட பல்வேறு படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார்.
90-களில் முன்னணி ஹீரோவாக இருந்த அவர், ‘பருத்தி வீரன்’ படத்திற்குப் பிறகு, குணச்சித்திர வேடங்களில் நடிக்கத் தொடங்கினார். சமீபத்தில் வெளியான ‘சட்டமும் நீதியும்’ என்ற வலைத் தொடரில் அவர் நடித்தது கவனிக்கப்பட்டது.

இந்தச் சூழலில், சேலம் மாவட்டம், தனது சொந்த ஊரான வட்டக்காட்டில் சரவணன் ஸ்டுடியோ ட்ரீம் ஃபேக்டரி என்ற பெயரில் ஒரு படப்பிடிப்பு தளத்தையும் ஒரு ஸ்டுடியோவையும் கட்டியுள்ளார்.
இயக்குனர் பாண்டிராஜ் ஆகஸ்ட் 27-ம் தேதி அதைத் திறந்து வைக்கிறார். அங்கு கட்டப்பட்ட விநாயகர் கோயிலின் கும்பாபிஷேகமும் அன்றைய தினம் நடைபெறும்.