விஜய் நடிப்பில் உருவாகும் ‘ஜனநாயகன்’ திரைப்படம் அவரின் கடைசி படமாக உருவாகி வருகிறது. எச். வினோத் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. தற்போது இறுதிக்கட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் இந்த படத்தின் அப்டேட்களுக்காக காத்திருக்கின்றனர்.

முன்னதாக ‘கோட்’ படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை என்பதால், ‘ஜனநாயகன்’ படம் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இப்படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்கிறார். அவர் சமீபத்தில் தனது காட்சிகளுக்கான ஷுட்டிங்கை முடித்ததாக இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்துள்ளார். விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு பட அப்டேட் வெளியாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தப் படத்தில் பாலிவுட் நடிகர் பாபி தியோல் வில்லனாக அறிமுகமாகிறார். மேலும் மமிதா பைஜு, நரேன், பிரியாமணி, பிரகாஷ்ராஜ், கெளதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். அனிருத் இசையமைப்பில் உருவாகும் இந்த படம் தொழில்நுட்ப ரீதியாகவும் பல்வேறு வித்தியாசங்களை கொண்டதாக உருவாகி வருகிறது.
விஜய் தற்போது அரசியலில் ஈடுபட இருப்பதை அறிவித்துள்ள நிலையில், ‘ஜனநாயகன்’ அவரது கடைசி திரைப்படமாக உருவாகுவது ரசிகர்களிடையே உணர்வுபூர்வ எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தை 2026 பொங்கல் விழாவை முன்னிட்டு வெளியிடும் திட்டத்தில் படக்குழுவினர் இருக்கின்றனர்.