சிவகார்த்திகேயன் நடித்த ‘அமரன்’ படத்தை இயக்கியவர் ராஜ்குமார் பெரியசாமி. இப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இப்படம் மறைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டது. ‘அமரன்’ படத்திற்கு பிறகு தனுஷ் நடிக்கும் படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்கவுள்ளார்.
தனுஷ் படத்தின் கதைக்களம் பற்றி கூறும்போது, ”அமரன்’ திரைப்படம் துணிச்சலுக்காக விருது பெற்ற ஒரு நிஜ ஹீரோவைப் பற்றியது. டி 55 திரைப்படம் சமூகத்தில் நாம் அறியாத பல அறியப்படாத ஹீரோக்களின் கதை” என்று ராஜ்குமார் பெரியசாமி கூறினார். இப்படத்தை கோபுரம் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

திரைக்கதையை இறுதி செய்யும் பணியில் ராஜ்குமார் பெரியசாமி ஈடுபட்டுள்ளார். அதன்பிறகு படப்பிடிப்புக்கான இடங்களைத் தேர்வு செய்து நடிகர்களைத் தேர்ந்தெடுப்பதில் தீவிரம் காட்டி வருகிறார். அடுத்த ஆண்டு இறுதியில் படப்பிடிப்பு தொடங்கும் என்று கூறப்படுகிறது.