மும்பை: பாலிவுட் நடிகை தனுஸ்ரீ தத்தா கடந்த 4 முதல் 5 ஆண்டுகளாக தனது வீட்டில் தொடர்ச்சியான துன்புறுத்தல்கள் மற்றும் உயிருக்கு அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதாகக் கூறி உதவி கோரியுள்ளார்.
சிலர் இந்த வீடியோவை ‘விளம்பரத்திற்காக’ விமர்சித்தாலும், அவர் அளித்த மற்றொரு நேர்காணலில், ‘நான் எந்த நாடகத்தையும் செய்யவில்லை; பல ஆண்டுகளாக நான் அனுபவித்த வலி, மன அழுத்தம் மற்றும் பயத்தை வெளிப்படுத்தியுள்ளேன்.

மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்துடன் ஒரு படத்தில் நடிக்கப் போகிறேன். நான் எதிர்கொள்ளும் துன்புறுத்தலுக்கும் சுஷாந்தின் மரணத்திற்கும் தொடர்பு இருப்பதாக உணர்கிறேன்.
நான் அமைதியான மற்றும் ஆன்மீக வாழ்க்கையை வாழ்கிறேன், ஆனால் ஊடகங்கள் தொடர்ந்து என்னைத் துன்புறுத்தி வருகின்றன,’ என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.