சென்னை: கருத்து வேறுபாடு காரணமாக பரஸ்பர விவாகரத்து பெற்ற வழக்கில் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ், பாடகி சைந்தவி ஆகியோர் செப்டம்பர் 25-ம் தேதி நேரில் ஆஜராக சென்னை குடும்பநல நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திரைப்பட இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் என்ற பிரகாஷ்குமார் தனது பள்ளி தோழியும் திரைப்பட பின்னணி பாடகியுமான சைந்தவியை 2013-ல் திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு அன்வி என்ற மகள் உள்ளார். 12 வருட திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட விரிசல் காரணமாக இருவரும் பரஸ்பர விவாகரத்து கோரி சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட சென்னை முதலாவது கூடுதல் குடும்பநல நீதிமன்ற நீதிபதி செல்வ சுந்தரி, பரஸ்பர விவாகரத்து மனுவை செப்டம்பர் 25-ம் தேதிக்கு ஒத்திவைத்தார். அன்றைய தினம் ஜி.வி.பிரகாஷ், சைந்தவி நேரில் ஆஜராக நீதிபதி உத்தரவிட்டார்.