
பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ படத்தை விக்னேஷ் சிவன் இயக்குகிறார். செவன் ஸ்க்ரீன் மற்றும் நயன்தாராவின் ரவுடி பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கிறது. இந்நிலையில், எக்ஸ் ரேட்டட் இணையதளம் மற்றும் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ்வாக இருக்கும் விக்னேஷ் சிவன், திடீரென தனது எக்ஸ் ரேட்டட் இணையதள பக்கத்தை செயலிழக்க செய்துவிட்டு வெளியேறியுள்ளார்.
இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதே அவர் வெளியேற காரணம் என்று கூறப்படுகிறது. நயன்தாரா ஆவணப்படம் தொடர்பாக நடிகர் தனுஷுக்கு எதிராக விக்னேஷ் சிவன் கூறிய விவகாரத்தில் அவரது ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வந்தனர். இந்நிலையில் பான் இந்தியா இயக்குனர்கள் கலந்து கொண்ட நிகழ்ச்சியை பிரபல திரைப்பட விமர்சகர் ஒருவர் தொகுத்து வழங்கினார்.

இதில் விக்னேஷ் சிவனும் கலந்து கொண்டார். பான் இந்தியா இயக்குனர்களுக்கான நிகழ்ச்சியில் விக்னேஷ் சிவன் எப்படி கலந்து கொண்டார் என்று கேள்வி எழுப்பிய நெட்டிசன்கள்? அவரை தரக்குறைவாக விமர்சித்தனர். இதனால் கோபமடைந்த அவர், எக்ஸ்-தளத்தை விட்டு வெளியேறியதாக கூறப்படுகிறது. ஆனால், இது குறித்து விக்னேஷ் சிவன் எதுவும் கூறவில்லை.