சென்னை: 20 நாள்களில் எடுக்கப்பட்ட ‘ட்ரீம் கேர்ள்’ படம் காதலர் நாளில் ரீலீஸ் ஆகிறது.
இயக்குநர் எம்.ஆர். பாரதியின் ட்ரீம் கேர்ள் படம் காதலர் நாளான பிப்ரவரி 14ம் தேதியில் வெளியாகிறது. இயக்குநர் எம்.ஆர். பாரதி எழுதி, இயக்கிய ட்ரீம் கேர்ள் படத்தில் நாயகனாக ஜீவாவும் நாயகியாக ஹரிஷ்மிதாவும் நடித்துள்ளனர்.
காதல் கதையாக உருவாகியுள்ள ட்ரீம் கேர்ள், வெறும் 20 நாள்களிலேயே ரூ. 7 லட்சத்துக்குள்ளாக எடுக்கப்பட்டதாக இயக்குநர் கூறுகிறார். சினிமா இயக்குநராக வேண்டும் என்ற கனவுடன் இருக்கும் நாயகனுக்கும், பாடகியாக வேண்டும் என்ற கனவுடன் இருக்கும் நாயகிக்கும் இடையிலான காதலைக் காட்டுவதாக இப்படம் வரவிருக்கிறதாம். மேலும், இந்தப் படத்தில் வில்லன் கதாபாத்திரமும் கிடையாது.
கதாநாயகனும் கதாநாயகியும் தங்கள் கனவுகளைத் துரத்துவதைக் காட்டும் ட்ரீம் கேர்ள் படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக ஊட்டிலேயே எடுக்கப்பட்டுள்ளது.