நடிகர் பிருத்விராஜ் ‘லூசிஃபர்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். இதில் மோகன்லால், மஞ்சு வாரியர் மற்றும் பலர் நடித்திருந்தனர். அரசியல் ஆக்ஷன் த்ரில்லர் படம் 2019-ல் வெளியாகி சூப்பர் ஹிட்டானது.
மலையாள சினிமா வரலாற்றில் ரூ. 200 கோடி வசூலித்த முதல் படமாக இது அமைந்தது. இதைத் தொடர்ந்து, அதன் இரண்டாம் பாகம் ‘எல்2: எம்புரான்’ என்ற பெயரில் தயாரிக்கப்பட்டது. பிருத்விராஜ் இயக்கிய இந்தப் படம் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் பற்றிய காட்சிகளைக் கொண்டிருந்ததால் சர்ச்சையை சந்தித்தது.

மூன்றாம் பாகமான ‘எல்3: அஸ்ரேல்’ பற்றிய தகவல்கள் வெளியிடப்பட்டன. படத்தின் முக்கியமான காட்சிகள் நீருக்கடியில் படமாக்கப்படவிருந்ததாக செய்திகள் வந்தன. இந்த சூழ்நிலையில், பிருத்விராஜ் தரப்பு அதை மறுத்து, “சில ஊடகங்கள் லூசிஃபர் 3 படம் குறித்து தவறான தகவல்களை வெளியிட்டுள்ளன.
இது வெறுப்புப் பிரச்சாரத்தின் ஒரு பகுதி. போலி ஐடி மூலம் ஒரு தவறான வதந்தி பரப்பப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளது.