மலையாள நடிகர் உன்னி முகுந்தனின் மேலாளராக இருந்த விபின் குமார், காக்கநாடு இன்போபார்க் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதில், டோவினோ தாமஸின் ‘நரிவேட்டை’ படத்தைப் பாராட்டி நான் ஃபேஸ்புக்கில் ஒரு பதிவை வெளியிட்டிருந்தேன். இதனால் கோபமடைந்த உன்னி முகுந்தன், தன்னைத் தாக்கியதாகவும், ‘மார்கோ’ படத்திற்குப் பிறகு சரியான வாய்ப்புகள் கிடைக்காததால் ஏற்பட்ட விரக்தியில் இதைச் செய்ததாகவும் கூறினார். இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், விபின் குமாரின் குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் விதமாக உன்னி முகுந்தன் ஒரு நீண்ட அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில், “கடந்த 2018-ம் ஆண்டு, நான் எனது சொந்த படத்தை தயாரிக்கவிருந்தபோது, விபின் குமார் என்னைத் தொடர்பு கொண்டார். அவர் பல பிரபலங்களின் PRO என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார்.
நான் அவரை எனது தனிப்பட்ட மேலாளராக நியமிக்கவில்லை. ‘மார்கோ’ படப்பிடிப்பின் போது அவர் எனக்கு பல பிரச்சனைகளை ஏற்படுத்தினார். பின்னர், அவர் செய்த தவறுகளுக்கு மன்னிப்பு கேட்டார். இந்த வழக்கில், அவர் என் மீது புகார் அளித்துள்ளார். அவர் கூறுவது போல் நான் அவரை உடல் ரீதியாக தாக்கவில்லை. அவர் கூறும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் உண்மைக்குப் புறம்பானவை. நான் அவரைத் தாக்கியதாகக் கூறும் இடத்தில் ஒரு CCTV கேமரா உள்ளது.”