சென்னை: நடிகர் கமல்ஹாசன் நேற்று சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட பதிவில் கூறியதாவது:- துப்பாக்கிகளின் சத்தம் மௌனித்து அமைதி நிலவிய சூழலில், நாட்டு மக்களின் அமைதிக்காக தங்கள் உயிரைக் கொடுத்தவர்களைக் கௌரவிக்கும் தருணம் இது. ஆபத்தான சூழலில் துணிச்சல், கடமை உணர்வு மற்றும் உறுதியுடன் பணியாற்றிய இந்திய ராணுவத்திற்கு நான் தலைவணங்குகிறேன். நீங்கள் இந்தியாவின் மரியாதை.
இந்திய மக்களின், குறிப்பாக ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான் மற்றும் குஜராத் மக்களின் எதிர்ப்பு அசாதாரணமானது. நீங்கள் தலைநிமிர்ந்து நிற்கிறீர்கள். இந்திய நாடு உங்களை நினைத்து பெருமை கொள்கிறது. இந்த சோதனையான காலகட்டத்தில், மாநிலங்கள் முழுவதும், மொழிகள் மற்றும் சித்தாந்தங்களைக் கடந்து இந்தியாவின் ஒற்றுமை மற்றும் மீள் எழுச்சி உணர்வை நாங்கள் கண்டிருக்கிறோம்.

இந்தியா தனது தீர்க்கமான நடவடிக்கையின் மூலம் பயங்கரவாதத்திற்கு ஒருபோதும் அடிபணியாது என்ற வலுவான செய்தியை உலகிற்கு அனுப்பியதற்காக இந்திய அரசாங்கத்தை நான் பாராட்டுகிறேன். நாம் அடைந்துள்ள வெற்றி நம்மை விழிப்புடன் இருக்கச் செய்ய வேண்டும். இது வெற்றியைக் கொண்டாடுவதற்கான நேரம் அல்ல. மாறாக, வலுவான இந்தியாவை மேலும் வலுப்படுத்தவும் மீண்டும் கட்டியெழுப்பவும் இது ஒரு சரியான தருணம். இவ்வாறு கமல்ஹாசன் கூறியுள்ளார்.