சென்னை: ‘நான் தான் முதலில் திருவிளையாடல் ஆரம்பம் படத்தில் நடிக்க இருந்தேன். முதலில் இயக்குனர் பூபதி பாண்டியன் என்னிடம் தான் கதை சொன்னார். ‘நான் சொல்றேன் சார்’ என அவரிடம் கூறி இருந்தேன் என்று நடிகர் பரத் தெரிவித்துள்ளார்.
நடிகர் தனுஷ் கெரியரில் முக்கிய படங்களில் ஒன்று திருவிளையாடல் ஆரம்பம். பிரகாஷ் ராஜ், ஸ்ரேயா உள்ளிட்ட பலர் நடித்து இருந்த படம் பெரிய ஹிட் ஆனது. மற்ற மொழிகள் பலவற்றிலும் இந்த படம் ரீமேக் ஆகி இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நடிகர் பரத் அளித்த பேட்டியில் ‘நான் தான் முதலில் திருவிளையாடல் ஆரம்பம் படத்தில் நடிக்க இருந்தேன். முதலில் இயக்குனர் பூபதி பாண்டியன் என்னிடம் தான் கதை சொன்னார். ‘நான் சொல்றேன் சார்’ என அவரிடம் கூறி இருந்தேன்.
அதற்கு பிறகு அவர் தனுஷுக்கு கதை சொல்லி அவர் ஓகே சொன்னதால் அவரை ஹீரோவாக வைத்து படமாக்கிவிட்டார். அது போல நான் நடித்த காதல் படம் தனுஷ் நடித்திருக்க வேண்டியது தான் என பரத் கூறியுள்ளார்.