ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகும் ஜெயிலர் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது கோலாகலமாக நடைபெற்று வருகிறது. மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற முதல் பாகத்திற்கு பின்னர், இரண்டாம் பாகம் உருவாகும் தகவல் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. தற்போது கேரளாவில் நடைபெறும் படப்பிடிப்பில் ரஜினி மற்றும் யோகி பாபு நடித்துக் கொண்டிருக்கும் காட்சிகள் வலைத்தளங்களை வலம் வருகின்றன.

சமீபத்தில் நடிகர் யோகி பாபு ஒரு பேட்டியில், இப்படத்தின் படப்பிடிப்பு அனுபவங்களை பகிர்ந்தார். அவர் கூறியதாவது, ஜெயிலர் முதல் பாகத்தில் நானே அதிகமாக ரஜினி சார் மீது நகைச்சுவை தாக்குதல்களை செய்தேன். அதை நினைவுகூர்ந்து, இரண்டாம் பாகத்தில் ரஜினி சார், “நெல்சன், யோகி பாபுவை இப்பொழுது சும்மா விடக்கூடாது, இந்தப் பாகத்தில் நான் பதில் வாங்கவேண்டும்” என புன்னகையோடு கூறினார்.
இந்த உரையாடல் யோகி பாபுவையும் நெல்சனையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. மேலும், ரஜினி அவருக்கென பதிலடிகளையும் கவுண்டர்களையும் தயார் செய்து வைத்திருப்பதாக யோகி பாபு நகைச்சுவையாக கூறியுள்ளார். “அந்த கவுண்டர்கள் எல்லாம் வேறு லெவல் தான். ரஜினி சார் இன்னும் சூப்பர்ஸ்டாராக இருக்க காரணமே இதுதான்” என்றார் அவர்.
நெல்சன் இயக்கத்தில் யோகி பாபு தொடர்ந்து முக்கிய இடம் பிடித்து வருகிறார். கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட், ஜெயிலர் ஆகிய அனைத்து படங்களிலும் யோகி பாபுவின் நகைச்சுவை கலக்கியதை நாமறிந்ததே. இப்போது ஜெயிலர் 2-இல் அவரும் ரஜினியும் மீண்டும் இணைந்து காமெடியில் தீ வைக்கவுள்ளனர்.
ஜெயிலர் படத்தின் முதல் பாகத்தில் இருவருக்கிடையேயான சாஃப்ட் கலாய்ப்பு நன்றாகவே பஞ்ச் காமெடியாக இருந்தது. அதே பாணியில், இரண்டாம் பாகம் இன்னும் வேகமெடுத்த காட்சிகளுடன் வெளிவரவிருக்கிறது. “நீ ரொம்ப பண்ணிட்ட” என ரஜினி கூறும் காட்சி ரசிகர்களுக்கு இப்போதும் ஞாபகம் இருக்கும். இதற்கெல்லாம் பதிலடியாக ரஜினி யோகி பாபுவிற்கு கவுண்டர்கள் கொடுப்பது போல காட்சிகள் இருப்பதாக கூறப்படுகிறது.
யோகி பாபுவும், இயக்குனர் நெல்சனும் கூட்டணியாக அமைந்திருக்கும் இந்த படத்தில் ரஜினியுடன் இணைந்துள்ளதன் மூலம் நகைச்சுவையின் தரம் இன்னும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரஜினி தற்போது ஜெயிலர் 2 படப்பிடிப்பில் மகிழ்ச்சியாகவும் உற்சாகமாகவும் இருக்கிறார் என்றும் யோகி பாபு தெரிவித்துள்ளார்.
தற்போதுள்ள சூழ்நிலையில் ஜெயிலர் 2 திரைப்படத்திற்கு ஏற்பட்டுள்ள எதிர்பார்ப்பு, முதல் பாகத்திற்கும் மேல். இதனால், இயக்குநர் நெல்சன் மிகுந்த கவனத்துடன் திரைக்கதை, படப்பிடிப்பு மற்றும் ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் நுட்பமாக கையாளுகிறார். ரசிகர்களிடையே இது மீண்டும் மாபெரும் வெற்றியைப் பெற்ற திரைப்படமாக உயரும் என்பதில் சந்தேகமில்லை.
ரஜினி – யோகி பாபு காம்போ மீண்டும் திரைமேடை கைப்பற்றும் இந்த ஜெயிலர் 2 திரைப்படம், பெரும் வசூல் சாதனைகள் செய்யும் என திரைத் துறையினரும் ரசிகர்களும் எதிர்பார்த்து வருகின்றனர்.