மணிரத்னம் இயக்கும் ‘தக்லைப்’ திரைப்படம் ஜூன் 5ஆம் தேதி வெளியானது. இப்படம், நாயகன் படத்திற்குப் பிறகு கமல்ஹாசனும் மணிரத்னமும் இணையும் நிகழ்வாகும். இந்த கூட்டணி சினிமா ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த படத்தில் கமலுடன் சிம்புவும் முதன்முறையாக இணைந்துள்ளார்.

திரிஷா, அபிராமி, அசோக் செல்வன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். ஏ.ஆர். ரஹ்மானின் இசையில் வெளியாகியுள்ள முதல் பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. மே 17 ஆம் தேதி படத்தின் ட்ரைலர் மற்றும் மே 24ஆம் தேதி இசை வெளியீட்டு விழா நடைபெற உள்ளது.தற்போது, இந்த படத்தின் கதையைப் பற்றிய ஒரு சுவாரஸ்யமான தகவல் வெளியாகியுள்ளது.
கமல் நடித்திருக்கும் சக்திவேல் நாயக்கர் கதாபாத்திரம் ஒரு பெரிய டான். அவருடைய மகன் சிறுவயதில் இறந்துவிட்டதாக நம்புகிறார். ஆனால், அந்த மகன் உயிருடன் இருப்பது பல வருடங்களுக்கு பிறகு தெரிய வருகிறது.இந்நிலையில் அந்த மகன் தனது தந்தைக்கு எதிராக மாறுகிறார். இந்த மோதலே இப்படத்தின் கதையின் மையமாக அமைந்துள்ளது.
இப்படத்தில் சிம்பு, கமலின் மகனாகவும் ஒரு போலீசாகவும் நடிக்கலாம் என கூறப்படுகிறது.இந்த கதைக்கான அதிகாரப்பூர்வ உறுதி ஏதும் இல்லை. ஆனால் இது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தின் கதை உண்மையா, வதந்தியா என்பது திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் வரை தெரியாது.