‘தக் லைஃப்’ படத்துக்குப் பிறகு ‘பார்க்கிங்’ இயக்குநர் ராம்குமார் இயக்கத்தில் நடிக்க தேதிகள் ஒதுக்கியிருக்கிறார் சிம்பு. இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது. சிம்புவுக்கு கதாநாயகியாக நடிக்க கயாடு லோஹர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதனை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. சிம்பு-கயாடு லோஹர் கூட்டணியிலும் சந்தானம் நடிக்கவுள்ளார்.

இதனை சந்தானம் சமீபத்தில் அளித்த பேட்டியில் உறுதி செய்துள்ளார். இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைக்கவுள்ளார். மொத்த படப்பிடிப்பையும் ஒரே கட்டமாக முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது. இதனை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. ராம்குமாரை முடித்த பிறகு, சிம்பு தனது 50-வது படத்திற்கு செல்கிறார்.
இதனை தேசிங்கு பெரியசாமி இயக்கவுள்ளார். இத்துடன் தனது 51-வது படத்தையும் தொடங்கவுள்ளார் சிம்பு. இதனை அஸ்வத் மாரிமுத்து இயக்கவுள்ளார். இந்த இரண்டு படங்களையும் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.