மும்பை: கீர்த்தி சுரேஷ் மற்றும் ஆண்டனி தட்டி திருமணம் கடந்த 12-ம் தேதி நடந்தது. இந்நிலையில், நேற்று மாலை மும்பையில் நடந்த ‘பேபி ஜான்’ இந்தி படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சியில் கீர்த்தி சுரேஷ் கலந்து கொண்டார். அப்போது கவர்ச்சியான ஆடையும் தாலியும் அணிந்திருந்தாள். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது. இந்நிலையில் நேற்று இரவு படக்குழுவினர் விருந்து கொடுத்துள்ளனர்.
இதில் பங்கேற்க கீர்த்தியின் கணவர் ஆண்டனிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் அவர் விருந்துக்கு வரவில்லை. கீர்த்தி சுரேஷ் மட்டும் தனியாக வந்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து அவரிடம் கேட்டபோது, ’சிலர் எல்லாவற்றையும் வித்தியாசமான கண்ணோட்டத்தில் பார்க்கிறார்கள். அப்படி எதுவும் இல்லை.

ஆண்டனி தட்டில் கூச்ச சுபாவமுள்ளவர். அதிகம் வெளியே செல்வதில்லை. அதனால் தான், பல ஆண்டுகளாக காதலித்து வந்தாலும், கீர்த்தியுடன் அவரை யாரும் வெளியே பார்க்கவில்லை. அதனால் தான், அவரும் பார்ட்டிக்கு வரவில்லை’ என, ஆண்டனிக்கு நெருக்கமான ஒருவர் தெரிவித்தார்.