அமெரிக்காவின் பிரபல பத்திரிக்கையான ஃபோர்ப்ஸ் இந்தியாவில் 30 வயதுக்குட்பட்ட 30 பிரபலங்களின் பட்டியலை ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குகிறது. அதன்படி தற்போது 2025-ம் ஆண்டுக்கான பட்டியலை வெளியிட்டுள்ளது. நடிகை அபர்ணா பாலமுரளி பொழுதுபோக்கு பிரிவில் இடம்பெற்றுள்ளார்.
அவருடன் இந்தி நடிகர் ரோஹித் சரஃப்பும் இடம்பெற்றுள்ளார். கடந்த ஆண்டு இவர்களின் பிரபலத்தை கருத்தில் கொண்டு இந்த பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டு தனுஷ் இயக்கிய ‘ராயன்’ மற்றும் மலையாளத்தில் ‘கிஷ்கிந்தா காண்டம்’, ‘ருத்திரம்’ ஆகிய படங்களில் நடித்திருந்தார் அபர்ணா பாலமுரளி.