அருண் மாதேஸ்வரன் இயக்கும் இந்தப் படத்தில் லோகேஷ் கனகராஜ் ஹீரோவாக நடிக்கிறார். ‘கூலி’ படத்திற்குப் பிறகு லோகேஷ் கனகராஜ் ஹீரோவாக நடிக்கிறார். இந்தப் படத்தை முடித்த பின்னரே அவர் ‘கைதி 2’ படத்தை இயக்குவார். லோகேஷ் நடிக்கும் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கும். இதற்காக பல்வேறு இயக்குனர்களிடம் கதைகளைக் கேட்டு வருகின்றனர்.

தற்போது அருண் மாதேஸ்வரன் கதையை இறுதி செய்து முதல் கட்ட வேலைகளைத் தொடங்கியுள்ளார். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும். லோகேஷ் கனகராஜ் படத்திற்காக பல்வேறு பயிற்சிகளை மேற்கொள்ள உள்ளார். ‘கூலி’ படத்தின் இறுதிக்கட்ட பணிகள் முடிந்ததும் அதில் முழுமையாக கவனம் செலுத்துவார்.
‘அருண் மாதேஸ்வரன்’ படத்தை முடித்த பிறகு லோகேஷ் கனகராஜ் இந்த ஆண்டு இறுதிக்குள் ‘கைதி 2’ படத்தின் படப்பிடிப்பைத் தொடங்குவார். இதை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் மற்றும் கே.வி.என் இணைந்து தயாரிக்கும்.