மணிரத்னம் இயக்கிய தக்லைஃப் படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று வரை பேசப்படும் நிகழ்வாகி இருக்கிறது. இந்த விழாவில் நடிகை த்ரிஷா கிருஷ்ணன் கலந்து கொண்டு சொன்ன சில விஷயங்கள் தற்போது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. குறிப்பாக, ஊதா நிற உடையில் ஜொலித்த அவரது தோற்றமும், பேச்சும் ரசிகர்களை அலற வைத்துள்ளன.

விழாவில் பேசும் போது த்ரிஷா, “இந்தப் படத்தில் என் கதாபாத்திரம் இசையை மையமாக கொண்டது. படத்தில் உள்ள ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் பாசிட்டிவ் ஷேட்ஸ் இருக்கின்றன, அதே நேரத்தில் சில நெகட்டிவ் துளிகளும் காணப்படும்” என்றார்.
அதன் பிறகு, “விண்ணைத் தாண்டி வருவாயா” படத்துக்குப் பிறகு சிம்புவுடன் மீண்டும் இணைவது எப்போது என பலரும் கேட்டதை அவர் நினைவு கூறினார். “தக்லைஃப் ட்ரெய்லர் பார்த்ததும் சிம்புவுக்குத் தானே ஜோடி என கேட்கிறார்கள். ட்ரெய்லர் இரண்டு நிமிடம்தானே, படம் இரண்டு மணி நேரம். அதைப்பார்த்தால்தான் புரியும்” என கூறியதும் கூட்டத்தில் அனைவரும் கைதட்டினார்.
மேலும் த்ரிஷா, “நான் மணிரத்னம் சார் இயக்கிய நான்கு படங்களில் நடித்திருக்கிறேன். கமல் சார் உடன் நான்கு படங்கள், ஏ.ஆர். ரஹ்மான் சார் இசையமைத்த நான்கு படங்கள் என பல வாய்ப்புகளைப் பெற்றிருக்கிறேன். நான் தான் கமல் சார் கிட்ட இருந்து நிறைய கற்றுக்கிட்டேன்” என பெருமையாக கூறினார்.
இந்த உரையை கேட்ட ரசிகர்கள் உடனே “அக்கா கணக்கு தப்பா சொல்லீட்டீங்க, ரஹ்மான் சார் இசையில் ஏழு படங்கள், சிம்புவுடன் மூன்று முறை இணைந்திருக்கீங்க” என பதிவிட்டனர். ஆனாலும் த்ரிஷா தன்னம்பிக்கையுடன் பேசிய அந்த கணக்குப் பேசுபொருளாக மாறியது.
தக்லைஃப் பட விழாவில் த்ரிஷாவின் தோற்றம் ‘பொன்னியின் செல்வன்’ பட விழாவை நினைவூட்டியது. குந்தவையாக தனது பங்களிப்புக்குப் பிறகு, த்ரிஷாவின் நடிப்பு வாழ்வில் புதிய உயரங்கள் தொடக்கமடைந்தது என ரசிகர்கள் நம்புகிறார்கள்.
மேலும், த்ரிஷா ஒரு படத்திற்காக ரூ. 12 கோடி சம்பளம் பெற்றதாகவும், அதனால் தென்னிந்திய சினிமாவின் அதிகம் சம்பளம் பெறும் நடிகையாக வளர்ந்துவிட்டதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
மணிரத்னம் இயக்கத்தில் ஒரே ஒரு படத்தில் கூட நடிக்க இண்டஸ்ட்ரியின் பலர் காத்திருக்க, த்ரிஷாவுக்கு நான்கு பட வாய்ப்புகள் கிடைத்திருப்பது அவரது தரத்தை கூறுகிறது. ஆனால், அவர் அதற்கேற்ற திமிர் இல்லாமல் எளிமையாகவே இருக்கிறார் என கமல் ஹாசன் பாராட்டியிருந்தார்.
இந்நிலையில் தக்லைஃப் படத்தில் யாருக்குத் தான் த்ரிஷா ஜோடியாக இருக்கிறார் என்பது ரசிகர்களிடையே விவாதமாக உள்ளது. இதற்கான விடையை கண்டுபிடிக்க, ரசிகர்கள் ஜூன் 5ம் தேதி படம் வெளியாகும் நாளுக்காக காத்திருக்கிறார்கள். “எங்கள் த்ரிஷா மாதிரி யாரு மச்சான்” என இணையம் முழுக்க ரசிகர்களின் குரல் ஒலிக்கிறது.