மத்திய அரசு நடிகர் மோகன்லாலுக்கு தாதாசாகேப் விருதை அறிவித்துள்ளது. இந்த விருது நாளை 71-வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் வழங்கப்படும். மோகன்லாலுக்கு விருது அறிவிக்கப்பட்ட பிறகு, அரசியல் தலைவர்கள், திரைப்படத் துறையினர் மற்றும் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். இந்த நிலையில், பத்திரிகையாளர்களை சந்தித்த மோகன்லால், இந்த விருதை மலையாள சினிமாவுக்கு அர்ப்பணிப்பதாகக் கூறினார்.
“இது ஒரு பெருமையான தருணம். இதை நான் தனியாக அனுபவிக்க முடியாது. இதை பார்வையாளர்களுடன், கடந்த காலத்தில் என்னுடன் பணியாற்றியவர்களுடன், இப்போது என்னுடன் பணிபுரிபவர்களுடன் மற்றும் என்னுடன் பணிபுரியப் போகிறவர்களுடன் பகிர்ந்து கொள்வேன். நான் ஒரு பெரிய கனவு காண்பவன் அல்ல.

எனது சமூக அர்ப்பணிப்பு என்ன என்று நீங்கள் என்னிடம் கேட்டால், எனக்கு வரும் கதாபாத்திரங்களை நன்றாக நடிக்க முயற்சிப்பதே அது. ஒரு படத்தை தனியாக எடுக்க முடியாது; அது பலரின் படைப்பு.
நாம் நல்ல படங்களை எடுக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன், மலையாளத் துறையில் நல்ல படங்கள் தயாரிக்கப்பட வேண்டும் என்று நான் விரும்புகிறேன், அதில் ஒரு பகுதியாக இருக்க விரும்புகிறேன்,” என்று அவர் கூறினார்.