அனில் ரவிபுடி இயக்கும் படத்தில் சிரஞ்சீவியின் நாயகியாக நயன்தாரா நடிப்பது குறித்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. அனில் ரவிபுடி இயக்கத்தில் சிரஞ்சீவி நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும். படத்தின் பூஜை முடிந்து முதல் கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. ஜூன் மாதம் படப்பிடிப்பை தொடங்க படக்குழு திட்டமிட்டுள்ளது.
இதில் சிரஞ்சீவியின் நாயகியாக நடிக்க பல்வேறு முன்னணி கதாநாயகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. விளம்பரம் இறுதியாக, படத்தில் சிரஞ்சீவியின் நாயகியாக நயன்தாரா நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார். விரைவில் ஒப்பந்தம் கையெழுத்தாகி அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும். மற்றொரு நாயகியாக கேத்தரின் தெரசா நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

மற்ற அனைத்து கதாபாத்திரங்களும் கையெழுத்தாகிவிட்டன. படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன், சிரஞ்சீவியுடன் நடிக்கும் நடிகர்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாக உள்ளது. மேலும், ‘சங்கராந்திகி வஸ்துணனம்’ படத்திற்குப் பிறகு அனில் ரவிபுடி இயக்குவதால், இந்தப் படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.