இயக்குநரும் நடிகருமான எஸ்.ஜே.சூர்யா கடந்த சில வருடங்களாக நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். தற்போது, லவ் இன்சூரன்ஸ் கம்பெனி, சர்தார் 2 உள்ளிட்ட சில படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், 10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒரு படத்தை இயக்குகிறார். முன்னதாக, ‘இசை’ படத்தை தயாரித்து இயக்கியிருந்தார். இந்தப் படம் 2015-ல் வெளியிடப்பட்டது. அவர் இயக்கும் படத்திற்கு இப்போது ‘கில்லர்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

ப்ரீத்தி அஸ்ரானி கதாநாயகியாக நடிக்கிறார். ஸ்ரீகோகுலம் மூவிஸுடன் இணைந்து ஏஞ்சல் ஸ்டுடியோஸ் இதைத் தயாரிக்கிறது. எஸ்.ஜே.சூர்யாவின் கனவுப் படத்தில் இந்த கார் முக்கியமானது என்பதால், ஜெர்மனியில் இருந்து புதிய பி.எம்.டபிள்யூ கார் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.
எஸ்.ஜே.சூர்யா தனது பிறந்தநாளை முன்னிட்டு தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் தயாரிக்கப்படும் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளார். தற்போது படப்பிடிப்பு நடந்து வருகிறது.