ஜூன் 2-ம் தேதி முதல் ஜீ தமிழ் சேனலில் ‘அயலி’ என்ற புதிய மெகா தொடர் ஒளிபரப்பாகிறது. இதில் தேஜஸ்வினி கதாநாயகியாக நடிக்கிறார். ‘நினைத்தாலே இனிக்கும்’ ஆனந்த் செல்வன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். மேலும் பலர் வேடங்களில் நடிக்கின்றனர். தாயை இழந்த அயலி, அவரது மைத்துனியால் வீட்டில் பணிப்பெண் போல நடத்தப்படுகிறார்.

அவரது தாயார் சொன்ன வார்த்தைகளுக்காக அவர் குடும்பத்தை மிகவும் மதிக்கிறார். குடும்பத்தினருக்குத் தெரியாமல் அவர் ஒரு ரகசிய போலீஸ் அதிகாரியும் கூட. அவரது இந்த முகம் குடும்பத்தினருக்குத் தெரிய வருமா? குடும்பத்தினர் அயலியின் அன்பைப் புரிந்துகொள்வார்களா? தனது தாயின் மீது விழுந்த பழிக்கு அயலி பரிகாரம் செய்வாரா? கதை இதுதான். இந்தத் தொடர் ஜூன் 2-ம் தேதி முதல் இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பாகும்.