சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘டான்ஸ் ஜோடி டான்ஸ் ரீலோடட் 3’ நிகழ்ச்சியில், நடனக் கலைஞர்கள் மற்றும் பிரபலங்கள் ஜோடியாக நடனமாடினர்.
நடுவர்களாக பாபா பாஸ்கர், சினேகா மற்றும் வரலட்சுமி சரத்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். விஜய் ஆண்டனி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

தில்லை- ப்ரீத்தா, நிதின்-தித்யா, சபரிஸ்- ஜனுஷிகா, பிரஜனா-ககனா, மற்றும் திலீப்-மெர்சினா ஆகிய ஐந்து ஜோடிகள் இறுதிப் போட்டிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இதில், நிதின்-தித்யா ஜோடி இந்த சீசனின் வெற்றியாளர்களாக அறிவிக்கப்பட்டது. தில்லை-ப்ரீத்தா முதல் ‘ரன்னர்-அப்’ ஆகவும், பிரகனா-காகனா இரண்டாவது ‘ரன்னர்-அப்’ ஆகவும் வந்தனர். விஜய் ஆண்டனி அவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.