தமிழ் சினிமா மற்றும் டிவி உலகில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்திருக்கும் நடிகர் பிரேம் குமார், தனது மகன் கௌசிக் சுந்தரம் மற்றும் பூஜிதா கல்யாணராமனின் திருமணத்தை மிகக் கோலாகலமாக நடத்தினார். சின்னத்திரையில் “நிம்மதி நிம்மதி உங்கள் சாய்ஸ்” மற்றும் “அண்ணாமலை” போன்ற தொடர்களில் அறிமுகமான அவர், 1996ஆம் ஆண்டு நாட்டுப்புற பாட்டு படத்தின் மூலம் சினிமாவுக்குள் நுழைந்தார்.

வீராப்பு, மச்சக்காரன், உன்னைப்போல் ஒருவன், விக்ரம் வேதா, சர்க்கார், மாஸ்டர், கங்குவா போன்ற பல படங்களில் நடித்தவர். சமீபத்தில் வெளியான டிரெண்டிங் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
அவரது மகனின் திருமண விழாவில் திரையுலக பிரபலங்கள் பலர் நேரில் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர். நடிகர் சிவகார்த்திகேயன், கார்த்தி, விஜய் சேதுபதி, சூரி, மாதம்பட்டி ரங்கராஜ் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். திருமண புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன.
பழம்பெரும் நடிகர் சிவகுமாரும் தனது குடும்பத்துடன் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தார். இந்த விழா திரையுலகின் பெரிய நட்பு வட்டத்தை ஒரே இடத்தில் இணைத்த நிகழ்வாக அமைந்தது.
கௌசிக் சுந்தரம் நடிகராகவே தனது பயணத்தைத் தொடங்கியுள்ளார். சமீபத்தில் வெளியான ராசாத்தி மியூசிக் ஆல்பம் ஒரு மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது. அஜித், அட்லி போன்ற முன்னணி பிரபலங்களுடன் பழகி வருகிறார்.
திருமண புகைப்படங்களை பிரேம் குமார் தானே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் மணமக்களுக்கு வாழ்த்துகளை மழையாக்கி வருகின்றனர்.