‘புஷ்பா’ அல்லு அர்ஜுன் மற்றும் ராஷ்மிகா மந்தனா நடித்த மிகவும் பிரபலமான படம். சுகுமார் இயக்கிய இந்தப் படம் 2021-ல் வெளியிடப்பட்டது. இது தெலுங்கில் மட்டுமல்ல, பிற மொழிகளிலும் நல்ல வரவேற்பைப் பெற்றதால், அதன் தொடர்ச்சியான ‘புஷ்பா 2’ 2024-ல் வெளியிடப்பட்டது.
அல்லு அர்ஜுன் மற்றும் ராஷ்மிகா மந்தனாவுடன், ஃபஹத் ஃபாசில், ஜகபதி பாபு, சுனில் மற்றும் பலர் இதில் நடித்தனர். இந்தப் படம் சூப்பர் ஹிட்டானது. அதிக வசூல் செய்த இந்திய படங்களில் இது இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. இதன் தொடர்ச்சி தயாரிக்கப்படும் என்று கூறப்பட்ட நிலையில், அல்லு அர்ஜுன் வேறு படங்களில் பிஸியாக இருந்ததால் புஷ்பா 3 தயாரிக்கப்படாது என்ற செய்தி வெளியானது.

இந்த சூழ்நிலையில், துபாயில் நடைபெற்ற ஒரு விருது விழாவில் கலந்து கொண்ட இயக்குனர் சுகுமார், ‘புஷ்பா 3’ நிச்சயமாக தயாரிக்கப்படும் என்று கூறினார். அல்லு அர்ஜுன் தற்போது அட்லீ இயக்கும் படத்தில் நடித்து வருகிறார்.
ராம் சரண் நடிக்கும் படத்தை சுகுமார் இயக்க உள்ளார். இருவரும் இந்தப் படங்களை முடித்த பிறகு புஷ்பா 3 உருவாகும் என்று கூறப்படுகிறது.