இந்தியாவில் அதிக வசூல் செய்த படம் ஆமீர்கான் நடித்த ‘டங்கல்’. இப்படம் ரூ.1950 கோடி வசூலித்ததாக கூறப்படுகிறது. அடுத்த இடத்தில் ‘பாகுபலி 2’ இருந்தது. இப்படம் ரூ.1,810 கோடி வசூலித்ததாக கூறப்படுகிறது. தற்போது ‘பாகுபலி 2’ படத்தின் வசூல் சாதனையை ‘புஷ்பா 2’ முறியடித்துள்ளது.
இப்படம் வெளியான 32 நாட்களில் உலகம் முழுவதும் 1,831 கோடி வசூலித்துள்ளது. அதே நேரத்தில் இந்திய சினிமா துறையில் அதிக வசூல் செய்த படம் என்ற புதிய சாதனையை ‘புஷ்பா 2’ படைத்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இன்னும் பல மாநிலங்களில் இப்படம் நல்ல வசூல் செய்து வருகிறது.

‘புஷ்பா 2’ இந்தியாவின் முதல் ரூ. 2,000 கோடி வசூல் செய்து வருகிறது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘புஷ்பா 2’. சுகுமார் இயக்கத்தில், அல்லு அர்ஜுன், ரஷ்மிகா மந்தனா, ஃபஹத் பாசில், சுனில், ஜெகபதி பாபு மற்றும் பலர் நடித்துள்ளனர். தேவி ஸ்ரீபிரசாத் பாடல்களுக்கு இசையமைத்துள்ளார், சாம் சிஎஸ் பின்னணி இசை அமைத்துள்ளார்.
‘புஷ்பா 2’ படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு அல்லு அர்ஜுனின் அடுத்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. த்ரிவிக்ரம் இயக்கும் படத்தில் அவர் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.