
அல்லு அர்ஜுன், ரஷ்மிகா மந்தனா, ஃபஹத் பாசில் மற்றும் பலர் நடித்துள்ள ‘புஷ்பா 2’ திரைப்படம் நாளை வெளியாகிறது. சுகுமார் இயக்கத்தில், தெலுங்கில் உருவாகியுள்ள இப்படம் தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளிலும் இந்திய அளவில் வெளியாகிறது. இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளதால், தெலுங்கானா மற்றும் ஆந்திரா மாநில அரசுகள் டிக்கெட் கட்டணத்தை உயர்த்த அனுமதித்துள்ளன.
இதற்கு நடிகர் அல்லு அர்ஜுன் நன்றி தெரிவித்துள்ளார். இந்தப் படத்தின் டிக்கெட்டுகள் வட மாநிலங்களில் ரூ. 300 முதல் ரூ. 3000. இந்நிலையில் புக் மை ஷோ இணையதளத்தில் அதிவேகமாக 1 மில்லியன் டிக்கெட்டுகள் விற்ற முதல் படம் என்ற சாதனையை ‘புஷ்பா 2’ படைத்துள்ளது.

இதன் மூலம், ‘கல்கி 2898’, ‘பாகுபலி 2’ மற்றும் ‘கேஜிஎஃப்-2’ சாதனைகளை முறியடித்துள்ளதாக புக் மை ஷோ சிஓஓ ஆஷிஷ் சக்சேனா தெரிவித்துள்ளார். “புக் மை ஷோவில் ஹைதராபாத், பெங்களூரு, மும்பை, டெல்லி மற்றும் புனே போன்ற நகரங்களில் ரசிகர்கள் டிக்கெட் முன்பதிவு செய்து வருகின்றனர்.
புஷ்பா 2 படத்திற்கு நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது” என்கிறார் ஆசிஷ். இது வசூல் ரீதியாகவும் சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.