மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த மாநாடு, 4-ம் தேதி வரை தொடரும். இந்தியா உட்பட சுமார் 100 நாடுகளைச் சேர்ந்த 10,000-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் மற்றும் படைப்பாளிகள் இதில் பங்கேற்கின்றனர். இந்தியா மற்றும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 650-க்கும் மேற்பட்ட நிறுவனங்களும் பங்கேற்கின்றன. பிரதமர் நரேந்திர மோடி மாநாட்டைத் தொடங்கி வைத்தார்.
மாநாட்டில் பேசிய இயக்குனர் ராஜமௌலி, “இவ்வளவு துடிப்பான மற்றும் வளமான கதை சொல்லும் கலாச்சாரத்தைக் கொண்ட நாடுகளில் உலகில் வேறு எந்த நாடும் இந்தியாவை நெருங்கவில்லை. இந்தியா ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக கதைசொல்லிகளின் பூமியாக இருந்து வருகிறது. பண்டைய புராணங்கள் மற்றும் இதிகாசங்களிலிருந்து லட்சக்கணக்கான கதைகள் எடுக்கப்பட்டுள்ளன. நமது நாட்டில் பல மொழிகள் உள்ளன. ஒவ்வொரு மொழிக்கும் நூற்றுக்கணக்கான ஆண்டு வரலாறு உண்டு. நமது வரலாறுகளிலிருந்து லட்சக்கணக்கான கதைகள் உள்ளன, அவற்றில் எண்ணற்ற கலை வடிவங்கள் உள்ளன.

நமது கதைகள் வரம்பற்றவை. கதை சொல்லல் எப்போதும் இந்தியாவின் டிஎன்ஏவில் உள்ளது. நமது கதை சொல்லும் மரபுகளின் ஆழத்தையும் பன்முகத்தன்மையையும் வேறு எந்த நாடும் ஒப்பிட முடியாது. நமக்கு இருக்கும் சக்தி குறித்து எனக்கு எந்த சந்தேகமும் இல்லை.
அமெரிக்கா, தென் கொரியா மற்றும் சீனா போன்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது சர்வதேச பொழுதுபோக்கு அரங்கில் இந்தியா இன்னும் முழுமையாக நிலைநிறுத்தப்படவில்லை. அதற்கு நமக்கு சரியான ஏவுதளம் தேவை. வேவ்ஸ் அதை நிறைவேற்றும் என்று நம்புகிறேன்,” என்று ராஜமௌலி கூறினார்.