நடிகை ராஷ்மிகா மந்தனா தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் நடித்து வருகிறார். அடுத்து அவர் ‘தி கேர்ள்பிரண்ட்’ உட்பட சில படங்களில் நடிக்கவுள்ளார். இதற்கிடையில், அவர் ‘டியர் டைரி’ என்ற வாசனை திரவிய பிராண்டை அறிமுகப்படுத்தியுள்ளார். அழகு மற்றும் வாசனை திரவியத் துறையில் முன்னணியில் உள்ள பிசிஏ குழுமத்துடன் இணைந்து இதைத் தயாரிக்கிறார்.
‘டியர் டைரி’யின் ஆரம்பத் தொகுப்பில் ‘நேஷனல் க்ரஷ்’, ‘இர்ரிபிளேசபிள்’ மற்றும் ‘கான்ட்ரவர்சியல்’ ஆகிய 3 தனித்துவமான வாசனை திரவியங்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது. இதைப் பற்றிப் பேசுகையில், “வாசனை திரவியம் என் வாழ்க்கையின் ஒரு முக்கிய அங்கமாக இருந்து வருகிறது.

நான் அது தொடர்பான ஒரு தொழிலைத் தொடங்கியுள்ளேன் என்பதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். அதே நேரத்தில் நான் மிகவும் உற்சாகமாகவும் பதட்டமாகவும் இருக்கிறேன். இந்த நிறுவனத்திற்கு உங்கள் ஆசீர்வாதம் கிடைக்கும் என்று நம்புகிறேன்.”
இதற்குப் பிறகு, திரைப்பட பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் அவரை வாழ்த்தினர். சில பாலிவுட் நடிகைகள் அழகு சாதனப் பொருட்களில் முதலீடு செய்துள்ளனர். நடிகை நயன்தாராவும் ‘ஸ்கின்’ என்ற அழகு சாதன நிறுவனத்தை நடத்தி வருகிறார். இப்போது ராஷ்மிகாவும் அவர்களுடன் சேர்ந்துள்ளார்.