ரவி மோகன் வெளியிட்ட அறிக்கை பெரும் உணர்ச்சி பூர்வமானதாயும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. அவர் கூறியது தனிப்பட்ட அனுபவங்களால் நிரம்பியது. அவர் கூறுகையில், தனது திருமண வாழ்க்கை விளையாட்டல்ல; உண்மையான பாடுதான். கடந்த 16 ஆண்டுகள் தனது வாழ்க்கை உடல், மன, உணர்ச்சி ரீதியாக மிகுந்த கொடுமைகளால் நிரம்பியதாக சொல்கிறார்.

அவரது முன்னாள் மனைவி ஆர்த்தி தன்னை பொன்முட்டையிடும் வாத்தாகவே பார்த்ததாக குற்றம் சாட்டுகிறார். தன்னை கணவனாக அல்லாமல் பணம் வந்த இடமாகவே நினைத்ததாக கூறுகிறார். பிள்ளைகளையும் பார்க்கவே அனுமதிக்காமல் தடுத்ததாக தெரிவிக்கிறார்.ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டதற்காக தனது கேரக்டருக்கும், தந்தையாக தகுதியுக்கும் மீது பொய் புகார்கள் வைக்கப்பட்டுள்ளதாக ரவி கூறுகிறார்.
அவர் கூறுகையில், இது தான் தன்னிடமிருந்து வரும் முதல் மற்றும் கடைசி அறிக்கை என்றும், இனி பேச விருப்பமில்லை என்றும் தெரிவிக்கிறார்.பணம் சம்பந்தமான பிரச்சனைகள், சொத்துக்கள், சோஷியல் மீடியா கணக்குகள் மற்றும் அவரது பிள்ளைகளுடன் உள்ள உறவுகள் எல்லாம் அவரிடம் இருந்து பறிக்கப்பட்டுவிட்டதாகவும் கூறுகிறார்.கடந்த கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு பிறகு தான் தனது பிள்ளைகளை பார்க்க முடியவில்லை என்றும், பவுன்சர்களை அனுப்பி தடுப்பு ஏற்படுத்தப்பட்டதாகவும் குறிப்பிடுகிறார்.
அவரது மகன்கள் கார் விபத்தில் சிக்கிய செய்தி கூட நேரடியாக தெரியவில்லை; கார் இன்சூரன்ஸில் கையெழுத்து தேவைப்பட்டதினால்தான் தெரிந்ததாக கூறுகிறார்.பணம் சம்பந்தமான கடன்களில் கூட தன்னை சிக்கவைத்திருப்பதாகவும், தனது சொந்த பெற்றோர்களை பார்க்க கூட அனுமதிக்காத நிலை ஏற்பட்டதாகவும் கூறுகிறார்.இந்த நிலைமை எந்த தந்தைக்கும் வரக்கூடாது என்பதுதான் அவரது முக்கிய கவலை.
கடந்த 5 ஆண்டுகளாக தனது பெற்றோர்களுக்கு ஓரு பைசா கூட அனுப்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக வருத்தம் தெரிவிக்கிறார்.முதுகில் குத்தப்பட்ட வாழ்க்கையை தொடர்ந்தவாறு இருந்ததும், இப்போது நெஞ்சில் குத்தப்பட்டதுபோல் இருப்பதும் தான் என்று அவர் உருக்கமாக தெரிவித்துள்ளார்.அவரது வாழ்க்கை ஒரு போராட்டமாக மாறியுள்ளதாகவும், இதற்காக தான் பொருத்தம், மவுனம் அனைத்தையும் அனுமதித்ததாகவும் கூறுகிறார்
.இனி தனது பிள்ளைகளின் நலனுக்காக மட்டுமே பிரார்த்தனை செய்வதாகவும், எதிர்காலம் குறித்து ஏதாவது நம்பிக்கை வைத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.அந்த வீட்டை விட்டு வெளியே வந்ததிலிருந்து ‘முன்னாள் மனைவி’ என்ற வார்த்தையை தேர்வு செய்ததாகவும், இது தான் அவரது இறுதி அறிக்கை என்றும் உறுதியாக கூறுகிறார்.சொத்து, குடும்ப உறவுகள், வாழ்க்கையின் அடிப்படை உரிமைகள் அனைத்தும் பறிக்கப்பட்டதாகவே அவர் உணர்கிறார்.இது போல் எந்த மனிதருக்கும், குறிப்பாக எந்த தந்தைக்கும் நேரவே கூடாதென்றும், சமூகம் இது குறித்து சிந்திக்க வேண்டிய தருணம் இது என்றும் அவருடைய மனவலி உணரப்படுகிறது.