சென்னை: புஷ்பா2 படத்தின் முதல் நாள் வசூல் மட்டும் 250 கோடி ரூபாயை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இயக்குநர் சுகுமார் மற்றும் நடிகர் அல்லு அர்ஜூன் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘புஷ்பா 2’.இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா, ஃபகத் ஃபாசில் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். பின்னணி இசையை சாம் சி.எஸ். உருவாக்கி இருக்கிறார்.
புஷ்பா படத்தின் முதல் பாகம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்ற நிலையில், இரண்டாம் பாகத்திற்கு பெரும் எதிர்ப்பார்ப்பு மத்தியில் திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியானது. திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. ரசிகர்கள் கொண்டாடி மகிழ்ந்து வருகின்றனர்.
ஒரு பக்கா மாஸ் கமெர்ஷியலாக உருவாக்கியுள்ளார் இயக்குனர் சுகுமார். திரைப்படத்திற்கு முன்பதிவு இணையத்தில் மட்டும் 30 லட்ச டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
படத்தின் முதல் நாள் வசூல் மட்டும் 250 கோடி ரூபாயை தாண்டும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.