
பஹல்காமில் நடந்த தீவிரவாத தாக்குதலை அடுத்து, இந்தியா நடத்திய ஆபரேஷன் சிந்தூர் பற்றி பலர் பாராட்டியிருக்கிறார்கள். ஆனால் பாகிஸ்தான் நடிகர் ஃபவாத் கான், இந்த ஆபரேஷனை வெட்கக்கேடாக விவரித்து தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார்.அவர், “இந்த வெட்கக்கேடான தாக்குதலில் பலியானவர்களுக்கு இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். பாகிஸ்தான் ஜிந்தாபாத்,” என பதிவு செய்துள்ளார்.
இதனால் இந்திய ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.இந்த பதிவை பார்த்த நடிகை ரூபாலி கங்குலி, “நீங்கள் இந்திய படங்களில் நடித்ததே நமக்கு வெட்கக்கேடாக இருக்கிறது,” என ட்வீட் செய்து விளாசியுள்ளார். இந்த பதிலை பாராட்டி சமூக வலைதளங்களில் பலர் அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, பாக். நடிகர்களை இந்தியாவில் பணியமர்த்தக் கூடாது எனவும் கோரிக்கைகள் எழுந்துள்ளன.இதே நேரத்தில், இந்த சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு பல இயக்குநர்கள் “ஆபரேஷன் சிந்தூர்” என்ற பெயரில் படம் எடுக்க விரும்புகிறார்கள்.
யுரி தாக்குதல் சம்பவத்தை திரைபடமாக்கிய ஆதித்யா தார், இந்த படத்தையும் இயக்க விரும்புகிறார்.அவர் இந்த தலைப்பை பதிவு செய்ய முயற்சி செய்து வருகிறார்.
போட்டியும் அதிகமாகவே இருக்கிறது.”ஆபரேஷன் சிந்தூர்”, “மிஷன் சிந்தூர்” போன்ற பெயர்கள் தற்போது பெருமளவில் தேடப்படுகின்றன.இந்த நிகழ்வு, சினிமா உலகத்திலும் அரசியலிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.இந்த விவகாரத்தில் இன்னும் என்ன நடக்கப்போகிறது என்பதைக் காண பொறுத்திருந்து பார்ப்போம்.