ஒடிசாவில் ராஜமௌலி படத்தின் படப்பிடிப்பு காட்சிகள் இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் மகேஷ் பாபு மற்றும் பிருத்விராஜ் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். பிருத்விராஜ் தற்போது ‘எம்புரான்’ படத்தை விளம்பரப்படுத்தி வருகிறார். அவரிடம் ராஜமௌலி படப்பிடிப்பு காட்சிகள் வெளியாகுவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு அவர், “இணையத்தில் வெளியாகும் காட்சிகளை பார்ப்பதற்கு ஏன் அவசரப்படுகிறார்கள் என்று புரியவில்லை. அதில் புதுமை இல்லை. பெரிய படத்தின் வீடியோவை பார்க்கும் போது அனுபவத்தை கொல்வதுதான். அந்த காட்சிகளை பார்த்து பலன் இல்லை. பார்த்து பெரிய திரையில் பார்க்கும் போது எதிர்பார்ப்பை தான் இழக்கிறீர்கள்” என்றார்.

பிருத்விராஜ் மேலும் குறிப்பிட்டுள்ளார். மேலும், “ராஜமௌலி படத்தை ஒப்புக்கொண்டு ஒரு வருடத்துக்கு மேல் ஆகிவிட்டது. இந்த பேட்டியின் மூலம் முதன்முறையாக ராஜமௌலி படத்தில் நடிப்பதாக பிருத்விராஜ் அறிவித்துள்ளார். ராஜமௌலி இயக்கத்தில் மகேஷ் பாபு, பிருத்விராஜ், பிரியங்கா சோப்ரா உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.
இந்தியாவிலேயே அதிக பொருட்செலவில் தயாரிக்கப்பட்ட படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படம் 2027-ல் வெளியாகும்.