‘வாடிவாசல்’ படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்று பலரும் கேட்கிறார்கள். இதுகுறித்து தயாரிப்பாளர் தாணு அளித்துள்ள பேட்டியில், ஜூலை மாதம் படப்பிடிப்பு தொடங்கும். ஒரு வாரத்திற்கு முன்பு வெற்றிமாறனை சந்தித்தபோது 25 நிமிடம் கதை சொன்னார். இதுவே போதும் என்றேன். அந்த 25 நிமிட கதையிலேயே இப்படியொரு திரைக்கதையும் நடிப்பும் இருக்கிறது.

உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுக்கு இந்தப் படம் ஒரு அத்தியாயமாகவும் கலாச்சாரமாகவும் இருக்கும். தாணுவின் இந்த பேட்டி சூர்யா ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த வீடியோ பதிவு இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. படப்பிடிப்பு தொடங்குவது குறித்து தாணு பலமுறை இதேபோல் பேட்டி அளித்துள்ளார். ஆனால் அது தொடங்கவில்லை.
இந்த முறை கண்டிப்பாக தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தாணு தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘வாடிவாசல்’. இந்தப் படத்தில் சூர்யா முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்ய, ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கவுள்ளார். படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.