
திரைத்துறையின் மிக முக்கியமான ஐந்து பிரமுகர்கள் கமல்ஹாசன், சிம்பு, த்ரிஷா, ஏ.ஆர். ரகுமான் மற்றும் மணிரத்னம் ஒரே திரைப்படத்தில் இணைவது தமிழ் சினிமா வரலாற்றில் அரிதான நிகழ்வாகும். அந்த அளவுக்கு பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கிய படம் தான் ‘தக்லைஃப்’. இப்படம் ஆரம்ப கட்ட அறிவிப்பிலிருந்தே ரசிகர்களிடையே பெரும் ஆவலை ஏற்படுத்தியது.

இந்த எதிர்பார்ப்பை மேலும் உயர்த்தும் வகையில் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் பெரியளவில் புரமோஷன் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. கோடிக்கணக்கான ரூபாய்கள் செலவிடப்பட்ட இந்த ப்ரமோஷன்கள் மூலம் படம் மீதான பப்ளிசிட்டி உச்சத்தில் இருந்தது.
இந்நிலையில், படம் ஜூன் 5 ஆம் தேதி வெளியானது. ஆனால் முதல் நாள் வெளியீட்டுக்குப் பிறகு வந்த விமர்சனங்கள் ரசிகர்கள் மற்றும் திரை விமர்சகர்களிடையே கலவையான விமர்சனங்களை உருவாக்கின. படம் வெளியான முதல் நாளில் இதுவரை இருந்த எதிர்பார்ப்புக்கு மாற்றாக, வெறும் 17 கோடி ரூபாய்தான் வசூலாகியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்பின் வரும் மூன்று நாட்களில் — வியாழன் முதல் சனி வரை — மொத்த வசூல் 30 கோடியில் முடங்கியதாக திரை வட்டாரங்கள் கூறுகின்றன.
இந்த வசூல் எண்ணிக்கைகள், படத்தின் 180 கோடி ரூபாய் செலவுடன் ஒப்பிடுகையில் மிகவும் குறைவாகும். இதனால் தயாரிப்பாளர்கள் பொருளாதார ரீதியாக பெரும் சிக்கலில் சிக்கியிருக்க வாய்ப்புள்ளதாக திரை நிபுணர்கள் கருதுகின்றனர்.
இந்த அளவிற்கு பிரமாண்டம், பிரபலங்கள் மற்றும் ப்ரமோஷன் இருந்தும் படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறாததன் பின்னணி குறித்து பலரது கவனமும் திரும்பியுள்ளது. படம் எதிர்கால வாரங்களில் பாக்க்ஸ் ஆபிஸ் நிலையை மேம்படுத்துமா என்பதற்காக ரசிகர்களும், திரை உலகமும் காத்திருக்கிறது.