சென்னை: இயக்குனர் பாலாவின் படங்களிலும், இயக்குனர் முத்தையாவின் படங்களிலும் இணை இயக்குநராகப் பணியாற்றிய சுபாஷ் பாரதி, ‘போர் பறவைகள்’ என்ற குறும்படத்தை இயக்கியுள்ளார். இது நார்வேயில் நடந்த உலக திரைப்பட விழாவில் சிறந்த குறும்பட விருதை வென்றுள்ளது.

இந்தப் படம் இலங்கையில் போரின் இறுதிக் கட்டங்களில் தமிழர்களின் வாழ்க்கையையும் அரசியலையும் யதார்த்தத்தை மாற்றாமல் பதிவு செய்துள்ளது. படத்தில் கதாநாயகனாக நடிக்கும் ஜெகன், இந்தக் குறும்படத்தைத் தயாரித்துள்ளார். ‘நார்வே தமிழ் திரைப்பட விழா’ இயக்குனர் வசீகரன் சிவலிங்கம், நார்வேக்கான இந்தியத் தூதர் டாக்டர் அக்கினோ விமல் மற்றும் ஒஸ்லோ நகர மேயர் அமினமெபல் ஆண்டர்சன் ஆகியோர் ஏற்பாடு செய்துள்ளனர். விருதுகளை வழங்கி பாராட்டி பேசினர்.