‘சுந்தரபாண்டியன்’, ‘இது கதிர்வேலன் காதல்’, ‘சத்ரியன்’, ‘கொம்பு வெச்ச சிங்கம்டா’ படங்களை இயக்கிய எஸ்.ஆர்.பிரபாகரன் அடுத்ததாக ஸ்டோன் எலிஃபண்ட் கிரியேஷன்ஸ் பேனரில் ‘றெக்கை முளைத்தேன்’ படத்தைத் தயாரித்து இயக்கி வருகிறார். இதில் தன்யா ரவிச்சந்திரன், பிரபா, குருதேவ், நித்திஷா, மெர்லின், ஜெய்பிரகாஷ், ‘ஆடுகளம்’ நரேன், கஜராஜ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
பாடலுக்கு தீசன் இசையமைத்துள்ளார், தரண்குமார் பின்னணி இசை அமைத்துள்ளார். கணேஷ் சந்தானம் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்தப் படத்தைப் பற்றி எஸ்.ஆர். பிரபாகரன் கூறுகையில், “இந்த மாதிரியான படங்களைத்தான் எடுப்பார் என்ற எண்ணத்தில் சிக்கிக் கொள்ளாமல், ஒவ்வொரு படத்திலும் ஏதாவது புதிதாக முயற்சிக்க விரும்பினேன்.

அதனால்தான் இதை க்ரைம் த்ரில்லர் வகையிலேயே உருவாக்கியுள்ளேன். படத்தின் கதை ஆரம்பம் முதல் இறுதி வரை பரபரப்பாக இருக்கும், கல்லூரியில் சேர்ந்த பிறகு புதிய சிறகுகளைப் பெற்றதாக உணரும் மாணவர்கள் ஒருபுறமும், அதிர்ச்சியூட்டும் குற்றத்தை விசாரிக்கும் காவல்துறை அதிகாரி தன்யா ரவிச்சந்திரன் மறுபுறம்.
இது ஆகஸ்ட் மாதம் திரையரங்குகளில் வெளியாகும்.”