அஜித் நடித்த விடாமுயற்சி திரைப்படம் வெற்றிபெறவில்லை என்றாலும், அதைத் தொடர்ந்து குட் பேட் அக்லி எனும் சூப்பர்ஹிட் படத்தை வெளியிட்டு ரசிகர்களை திருப்திப்படுத்தினார். இந்த வெற்றியின் பின்னணியில் தற்போது அஜித்துக்கு ரூ.150 கோடி சம்பளம் வழங்க தயாரிப்பாளர்கள் வரிசையில் நிற்கும் அளவுக்கு எதிர்பார்ப்பு உயர்ந்துள்ளது.

மாறாக, விடாமுயற்சி படத்தின் தோல்வி மகிழ்திருமேனிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. ஒரு பெரிய பட வாய்ப்பு அவரிடம் இருந்து கைவிட்டுவிட்டதாகவும், தற்போது எந்த ஹீரோவோ தயாரிப்பாளரோ அவரிடம் படம் இயக்கக் கூடிய மனநிலையிலே இல்லை என கூறப்படுகிறது.
படப்பிடிப்பு நடந்த காலத்தில் மகிழ்திருமேனி, அமிதாப்பச்சனை நேரில் சந்தித்து ஒரு கதையை கூறியிருந்தார். அவரது கதையைக் கேட்டு ஈர்க்கப்பட்ட அமிதாப், அதில் நடிக்க சம்மதித்ததாக தகவல்கள் வெளியானது. ஆனால், விடாமுயற்சி தோல்வியும், அஜித் மூலம் மகிழ்திருமேனி குறித்து சில விவரங்களை அறிந்ததும், அமிதாப் அந்த திட்டத்திலிருந்து விலகியதாக கூறப்படுகிறது.
தற்போது மகிழ்திருமேனி, வேறு சில முன்னணி நடிகர்களை சந்தித்து புதிய கதைகளை கூற முயற்சி செய்து வருகிறார். ஆனால், அவரிடம் யாரும் ஆர்வம் காட்டவில்லை என்பது இப்போதைய நிலை. அவரது கதை சொல்வது மிகவும் வித்தியாசமானது என்றாலும், ஹீரோக்களுக்கு மரியாதை கொடுப்பதில் காணப்படும் குறைபாடுதான் அவருக்கு புதிய வாய்ப்புகள் தேடுவதில் தடையாக இருக்கிறது என்றே கூறப்படுகிறது.