மோகன்லால் நடிப்பில் 2019-ம் ஆண்டு வெளியான ‘லூசிஃபர்’ திரைப்படம் வெற்றி பெற்றது. இதனை நடிகர் பிருத்விராஜ் இயக்கியிருந்தார். இந்த படத்தின் இரண்டாம் பாகத்திற்கு ‘எல்2: எம்புரான்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இதை பிருத்விராஜ் இயக்குகிறார். மோகன்லால், மஞ்சு வாரியர், டோவினோ தாமஸ், ‘கேம் ஆப் த்ரோன்ஸ்’ நடிகர் ஜெரோம் பிளின் மற்றும் பலர் நடித்துள்ள இப்படம், மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வரும் 27-ம் தேதி வெளியாகிறது.

அதன் முன்பதிவு கடந்த வாரம் தொடங்கியது. 24 மணி நேரத்தில் அதிக டிக்கெட்டுகளை பதிவு செய்த முதல் இந்திய படம் என்ற சாதனையை இப்படம் படைத்தது. கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை 60 கோடி முன்பதிவு நடந்துள்ளது. இதனிடையே, இந்த படம் வெளியாவதை முன்னிட்டு பெங்களூருவில் உள்ள குட்ஷெப்பேடு கல்லூரிக்கு வரும் 27-ம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி ராஜராஜேஸ்வரி நகரில் உள்ள ஒரு தியேட்டரில் காலை 7 மணி காட்சிக்கான டிக்கெட்டுகளையும் முன்பதிவு செய்துள்ளனர். மோகன்லாலின் தீவிர ரசிகை என்பதால் கல்லூரி சேர்மன் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.