சென்னை: கயல் வின்சென்ட் மற்றும் டிஜே பானு நடிக்கும் ஓசை பிலிம்ஸ் தயாரிக்கும் ‘அந்தோணி’ படத்தின் படப்பிடிப்பு இலங்கை – யாழ்ப்பாணத்தில் நிறைவடைந்துள்ளதாகவும், டப்பிங் பணிகள் இப்போது தொடங்கப்பட்டுள்ளதாகவும் படக்குழு தெரிவித்துள்ளது.
அந்தோணி படத்தை சுகிர்தன் கிறிஸ்துராஜா மற்றும் ஜெனோசன் ராஜேஸ்வர் இயக்குகின்றனர். ஓசை பிலிம்ஸ் நிறுவனர் கலைவளரி சஹா ரமணா மற்றும் சுகந்தினி ரமணதாஸ் ஆகியோர் இதைத் தயாரிக்கின்றனர். ரமணன் இணை இயக்குநராகவும் பணியாற்றுகிறார்.

மேலும் விஜயன் பாலசிங்கம் (விஜய் பிலிம்ஸ்) மற்றும் சிறிஸ்கந்தராஜா (டிரிம்லைன் புரொடக்ஷன்ஸ்) ஆகியோர் இணை தயாரிப்பாளர்களாக இணைகின்றனர். அருள்தாஸ், நிழல்கள் ரவி, மற்றும் இலங்கை நடிகர் சுதர்சன் ரவீந்திரன் மற்றும் நடிகை சௌமி, ஆண்டவன் கட்டளை அரவிந்தன், இடையராஜ், யாசிதரன், தர்ஷிப்ரியா, ஷாமிலா, சாந்தா, ஷர்மிளா, வசந்த சீலன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
ரிஷி செல்வம் ஒளிப்பதிவு செய்கிறார். சித்தா, சென்னை சிட்டி கேங்ஸ்டர் போன்ற படங்களுக்கு எடிட்டிங் செய்த சுரேஷ் ஏ.பிரசாத் படத்தொகுப்பைக் கையாள்கிறார்.