‘சரிகமப சீனியர்ஸ்- சீசன் 5’ ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகும் பிரபலமான ரியாலிட்டி ஷோக்களில் ஒன்றாகும். இதை அர்ச்சனா தொகுத்து வழங்குகிறார், இதில் ஸ்ரீனிவாஸ், விஜய் பிரகாஷ் மற்றும் ஸ்வேதா மோகன் ஆகியோர் நடுவர்களாக உள்ளனர்.
மொத்தம் 28 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்த நிகழ்ச்சி மிகுந்த கவனத்தைப் பெற்றுள்ளது. இந்த சூழலில், இந்த சீசனின் வெற்றியாளருக்கு ரூ.60 லட்சம் மதிப்புள்ள வீடு பரிசாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

முதல் ரன்னர்-அப் இடத்தைப் பிடிக்கும் போட்டியாளருக்கு ரூ.10 லட்சம் மதிப்புள்ள ரொக்கப் பரிசும், இரண்டாவது ரன்னர்-அப் போட்டியாளருக்கு ரூ.3 லட்சம் மதிப்புள்ள தங்கப் பதக்கமும், மக்களின் இதயங்களை வெல்லும் போட்டியாளருக்கு ரூ.5 லட்சம் மதிப்புள்ள தங்கப் பதக்கமும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.