தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் நடித்து வரும் மாளவிகா மோகனன், தற்போது பிரபாஸுக்கு ஜோடியாக ‘தி ராஜா சாப்’ மற்றும் கார்த்தியின் ‘சர்தார் 2’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். ‘தி ராஜா சாப்’ படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமாகும் அவர், அந்த படத்தில் நடிப்பதற்கான காரணத்தை தெரிவித்துள்ளார். இதுபற்றி மாளவிகா மோகனன் பேசுகையில், “இதுவரை நான் நடிக்காத ஹாரர் காமெடி வகை படம் இது.
அதனால் எனக்கு ஆர்வத்தை ஏற்படுத்தியது. பெரும்பாலான கதைப் படங்களில் ஹீரோ கேரக்டர் பெரிது, ஹீரோயின் காட்சிகள் குறைவு. ஆனால், ‘தி ராஜா சாப்’ படத்தில் அப்படியல்ல. படம் முழுவதும் இருக்கிறேன். என் கேரக்டரும் சிறப்பான காட்சிகள். ஒரு பெரிய படத்தில் இப்படி ஒரு கதாபாத்திரம் உருவாக்கப்படுவது மிகவும் அரிதாகவே நடக்கும். கதாபாத்திரம் எனக்கு பிடித்திருந்தது. இயக்குனர் மாருதி இனிமையானவர். நான் பாகுபலி படத்தின் தீவிர ரசிகன். அதனால் பிரபாஸுடன் நடிக்க ஆசைப்பட்டேன். “இந்த வாய்ப்பு வந்தவுடன், நான் உடனடியாக ஒப்புக்கொண்டேன்,” என்று அவர் கூறினார்.