லண்டன்: 2023-ம் ஆண்டு குஜராத்தின் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியின் போது தனது 24 காரட் தங்க ஐபோன் தொலைந்துவிட்டதாக பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுடேலா புகார் அளித்திருந்தார்.
இது தொடர்பாக அகமதாபாத் போலீசாருக்கு அவர் விடுத்த கோரிக்கை சமூக ஊடகங்களில் பரபரப்பாக விவாதிக்கப்பட்டது.

இந்த நிலையில், தற்போது எமிரேட்ஸ் விமானத்தில் விம்பிள்டனுக்காக மும்பையில் இருந்து லண்டன் கேட்விக் விமான நிலையத்திற்கு பயணம் செய்துள்ளார். தனது பிரவுன் நிற ‘டியோர்’ பிராண்ட் பை, தனது பொருட்களை சேகரித்துக்கொண்டிருந்த இடத்தில் திருடப்பட்டதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
தனது விமான டிக்கெட் மற்றும் லக்கேஜ் ஸ்லிப்பின் படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து கொண்ட அவர், லண்டன் காவல்துறை மற்றும் எமிரேட்ஸ் ஏர்லைன்ஸிடம் தனது விலையுயர்ந்த பையை திருப்பித் தருமாறு அவசர கோரிக்கை விடுத்துள்ளார். ஊர்வசியின் இந்தப் பதிவிற்கு பலர் வேடிக்கையான கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.