சென்னை: மறைந்த ரோபோ ஷங்கர் நினைவாக நாஞ்சில் விஜயன் செய்த செயலுக்கு லைக்குகள் குவிந்து வருகிறது.
நகைச்சுவை கலைஞரும், நடிகருமான ரோபோ ஷங்கர் அவர்கள் கடந்த செப்டம்பர் 18 தேதி தனது 46 வயதில் உயிரிழந்தார். மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டவர் கடந்த சில வருடங்களாக எந்த படங்களிலும் நடிக்காமல் வீட்டிலேயே இருந்தார். இதனால் உடல் சுத்தமாக மெலிந்து ஆளே வேறொருவர் போல் காணப்பட்டார்.
அதில் இருந்து மீண்டவர் இப்போது தான் படங்கள் நடிக்க தொடங்கினார், ஆனால் அவர் தனது கடைசி நாளை எதிர்க்கொண்டுவிட்டார். அவரது இழப்பில் இருந்து மீளாத அவரது குடும்பத்தினர் அவருடன் எடுத்த போட்டோ, வீடியோக்கள் பதிவிட்ட வண்ணம் உள்ளனர்.
இந்த நிலையில் சின்னத்திரை பிரபலம் நாஞ்சில் விஜயன் இன்னொரு விஷயம் செய்துள்ளார். அதாவது ரோபோ ஷங்கர் மாலையுடன் இருக்கும் புகைப்படத்துடன் அவரும் அவரது மனைவியும் இடம்பெறும் வகையில் ஒரு பெரிய போட்டோ ரெடி செய்துள்ளார்.
அந்த வீடியோவை அவரே வெளியிட எல்லோரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். வீடியோவிற்கும் லைக்குகள் குவிந்து வருகிறது.