பிரபல தெலுங்கு இயக்குனர் பூரி ஜெகநாத். போக்கிரி, பிசினஸ்மேன், டெம்பர் உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ளார். 2022-ல், அவர் பான் இந்தியா திரைப்படமான ‘லைகர்’ ஐ இயக்கினார். இதில் விஜய் தேவரகொண்டா மற்றும் அனன்யா பாண்டே நடித்திருந்தனர். இதையடுத்து, தான் இயக்கும் படத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகின.

இந்நிலையில் படக்குழு அதை உறுதி செய்துள்ளது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் உருவாகும் இந்தப் படத்தை சார்மியுடன் இணைந்து பூரி ஜெகநாத் தயாரிக்கிறார். விஜய் சேதுபதி இதுவரை நடிக்காத கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில், ஜூன் மாதம் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.