விஜய்யின் கடைசி படமாக ‘ஜனநாயகன்’ உருவாகி வருகிறது. இதன் தமிழக உரிமையை பெற கடும் போட்டி நிலவுகிறது. அதன் உரிமைக்காக லலித்குமார், ராகுல் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தினர். தமிழக உரிமையை ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

‘கோட்’ படத்தின் தமிழக உரிமையை வாங்கி வெளியிட்டு வெற்றி பெற்றவர் ராகுல் என்பது நினைவுகூரத்தக்கது. இதனால் ‘ஜனநாயகன்’ உரிமைக்கும் அவருக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. ஆனால், இதுவரை ஒப்பந்தம் எதுவும் கையெழுத்தாகவில்லை. அனைத்தும் முடிவானதும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்.
கேவிஎன் தயாரிப்பில் உருவாகி வரும் படம் ‘ஜனநாயகன்’. எச்.வினோத் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விஜய், பாபி தியோல், பூஜா ஹெக்டே, கவுதம் மேனன், பிரியாமணி, மமிதா பைஜு மற்றும் பலர் நடித்துள்ளனர். சத்யன் சூர்யன் ஒளிப்பதிவு செய்கிறார், அனிருத் இசையமைக்கிறார்.