சென்னை: எஸ்.யு அருண்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘வீர தீர சூரன்: பாகம் 2’. ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த வெற்றியை தொடர்ந்து தமிழகத்தில் உள்ள சில திரையரங்குகளுக்கு படக்குழுவினர் சென்று அங்குள்ள ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகின்றனர்.

அப்போது பேசிய விக்ரம், ‘இயக்குனர் அருண்குமாரின் திறமை, படத்தில் ஒரு கதாபாத்திரத்தை காட்டாமல் அனைவரையும் பேச வைத்ததுதான். அது மிகவும் கடினம். முதல் பாகத்தில் பின்னணிக் கதையும், திலீப்பின் பாத்திரமும் இருக்கும். அப்போது மூன்றாம் பாகத்தில் வெங்கட்டின் வேடம்.’ என்று அவர் கூறியுள்ள தகவல் வைரலாகி வருகிறது.
இப்படத்தின் முதல் பாகத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என தெரிகிறது.