கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள புகழ்பெற்ற கூவாகம் கூத்தாண்டவர் கோயில் சித்திரைத் திருவிழா வரும் 29-ம் தேதி சாகை வார்த்தல் நிகழ்ச்சியுடன் தொடங்கும். இந்த நிகழ்வில், ஒவ்வொரு ஆண்டும் ‘மிஸ் திருநங்கை’ என்ற நிகழ்ச்சியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு, நடிகர் விஷால் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

முன்னாள் அமைச்சர் பொன்முடியும் ‘கூவாகம் விழா 2025’ நிகழ்ச்சியில் பங்கேற்றார். ‘மிஸ் திருநங்கை’ போட்டியில் தமிழ்நாட்டிலிருந்து மட்டுமல்லாமல், வெளி மாநிலங்கள், மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான திருநங்கைகள் பங்கேற்றனர். நிகழ்ச்சியின் இறுதியில், மேடையில் பேசிக் கொண்டிருந்த விஷால் கீழே இறங்கவிருந்த நிலையில், திடீரென மயக்கம் அடைந்தார்.
மேடையில் இருந்தவர்கள் உடனடியாக அவரை எழுப்பி, தண்ணீர் கொடுத்து, தனது காரில் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பினர். பொன்முடி காரில் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது. அங்கு முதலுதவி அளிக்கப்பட்ட பின்னர் அவர் குணமடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.